Wednesday, September 14, 2011

பூக்கும் விடியல்கள்

விழிகளில்.............
நேற்றைய கண்ணீரின்
ஈரங்கள்

நினைவுகளில்............
நடந்து வந்த பாதையின்
நிஜங்கள்

காற்றில்................
ஊர்வலம் போயின
சில நினைவுகள்

நிஜங்களில்........
சிதைந்தன பல
எண்ணங்கள்

ஆத்மாக்களில்...........
தேடப்பட்டன பல
உறவுகள்
தேடல்களில்
தொலைந்து போனோம்
நாம்.........

போன காலங்களால்
புரிந்து கொள்வோம்
பூக்கும் விடியல்களின்
புதிய வரவை!
புதிய உறவை!

5 பேர் ருசி பாத்துட்டாங்க:

Asiya Omar said...

மிக நல்ல கவிதை..

GEETHA ACHAL said...

வாவ்...ரொம்ப ரொம்ப அழகாக எழுதி இருக்கின்றிங்க..

சூப்பர்ப் தெய்வசுகந்தி...அடிக்கடி கொஞ்சம் ப்ளாக் பக்கம் வாங்க...குட்டிஸ் எப்படி இருக்காங்க...

தெய்வசுகந்தி said...

நன்றி ஆசியா!!

நன்றி கீதா!! குட்டீஸ் நல்லா இருக்காங்க!

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

simple and nice

Related Posts with Thumbnails