Sunday, November 28, 2010

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவையானவை

சாதம் உதிரியாக - 2 கப்
பச்சை கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
கடுகு - சிறிது
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எண்ணெய் - தேவைக்கு

அரைக்க
புதினா - 1 கட்டு
மல்லித்தளை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 7 அல்லது 8
புளி - சிறிது

செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து வைக்கவும்.
அப்பளம் அல்லது வடகம் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த நீளக்கத்தரிக்காய் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.(படம் google உதவி)

Wednesday, November 17, 2010

மோர்க்குழம்பு

இது காய் எதுவும் சேர்க்காமல் செய்யும் எளிமையான மோர்க்குழம்பு.

தேவையானவை
புளித்த மோர் - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு
எண்ணெய்

அரைக்க
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
  • அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அத்துடன் புளித்த மோர் , உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் கலந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதத்துடன் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.

Wednesday, November 3, 2010

ஒப்புட்டு (போளி)

இதுவும் கொங்கு ஸ்பெசல் இனிப்பு.

தேவையானவை
கடலைப்பருப்பு - 4 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிது
அச்சு வெல்லம் - 10 பெரியது.
மைதா மாவு - 2 1/2 கப்
சர்க்கரை - சிறிது.

நல்லெண்ணெய்.


செய்முறை

  • மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.(4 அல்லது 5 மணி நேரம் ஊற வேண்டும்)
  • கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும். குழையவிடக் கூடாது.
  • தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும்.
  • பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
  • சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும்.
  • அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும்.


  • பிறகு அதை ரொட்டி போல் தட்டவும்.(1/4 இன்ச் தடிமனுக்கு இருக்க வேண்டும்)

  • நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.
  • தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.

சுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.


நாலைந்து நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Tuesday, November 2, 2010

அதிரசம்(கச்சாயம்)


தேவையானவை

பச்சரிசி - 3 கப்
அச்சு வெல்லம் - 6 பெரியது
ஏலக்காய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
  • அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து உலர விடவும்.
  • வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  • அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
  • மிக்ஸில் அரிசியை பொடித்து, சலித்து எடுக்கவும்(உரல்ல இடிச்சு எடுப்பாங்க).
  • வெல்லப்பாகு வெது வெதுப்பாக இருக்கும் போது அரிசி மாவுடன் கலந்து தளர பிசையவும்.
  • இதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் வைக்கவும்.
  • மறுநாள் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி நடுவில் சிறு ஓட்டை செய்து சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
  • 2 நாள் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இதில் எள் சேர்த்து செய்யலாம். நான் மறந்துட்டேன். தீபாவளி ஸ்வீட் இது.

Related Posts with Thumbnails