Tuesday, February 24, 2009

காளான்(mushroom) குருமா

தேவையானவை


காளான் -1/2 kg or 1 lb(நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி இலை



வதக்கி அரைக்க
வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பூண்டு- 2 பல்
இஞ்சி - 1 துண்டு
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 5

செய்மூறை
  • எண்ணெய் விட்டு வெங்காயம் 1/2 , பூண்டு, இஞ்சியை நன்கு வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதை ஆற விட்டு முந்திரி, பாதாம் சேர்த்து அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து மீதமுள்ள வெங்காயம் , மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்தவுடன் காளான் மற்றும் கரம் மசாலா சேர்த்து மறுபடியும் 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
  • மல்லி இலை தூவி இறக்கவும்.

சப்பாத்தி, பராட்டா, சாதம் அனைத்துக்கும் நல்ல combination.

Related Posts with Thumbnails